ஆகஸ்ட்டில் மெக்சிகோவில் படப்பிடிப்பு தொடங்கும் என்.டி.ஆர், பிரசாந்த் நீல் படப்பிடிப்பு
ADDED : 729 days ago
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது 'தேவாரா' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கே. ஜி.எப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது.
இது ஜூனியர் என்டிஆரின் 31வது படமாக உருவாகிறது . இதற்கு தற்காலிகமாக 'என்டிஆர் - நீல்' என தலைப்பில் அழைக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக ஆகஸ்ட் மாதத்தில் மெக்சிகோவில் தொடங்குகிறது. மேலும், இதில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.