தனுஷ் ரசிகர்களை குஷி படுத்திய ஜி.வி. பிரகாஷ்!
தனுஷ் இயக்குனராக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை தனது மூன்றாவது படமாக இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் நடிக்கின்றார். அவருடன் இணைந்து அனைக்கா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை வொன்டர்பார் பிலிம்ஸ், ஆர்.கே.புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
தற்போது வரை இதன் 90 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. சமீபகாலமாக இந்த படத்திலிருந்து முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது என கூறிவந்த ஜி.வி.பிரகாஷ் இன்று தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடல் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பாடல் வெளியாகிறது. இதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.