உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முழுநேர சீரியல் நடிகையான பிக்பாஸ் அபிராமி

முழுநேர சீரியல் நடிகையான பிக்பாஸ் அபிராமி

சின்னத்திரை பிரபலமான அபிராமி தொலைக்காட்சி தொகுப்பாளராக மீடியாவில் அறிமுகமானார். சில படங்களில் நடித்துள்ள அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டு ரசிகர்களிடம் அதிகம் ரீச்சானார். அதன்பிறகு சினிமாவில் முழுநேர நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அபிராமிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஜீ தமிழில் ஒளிபரப்பான வீரா என்கிற தொடரில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஆரம்பித்த அபிராமி தற்போது முழுநேர சீரியல் நடிகையாக மாறியிருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மற்றொரு தொடரான நினைத்தேன் வந்தாய் தொடரில் சுடர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜாஸ்மின் ராத் தற்போது விலகிவிட்டார். அவருக்கு பதிலாக சுடர் கதாபாத்திரத்தில் இனி அபிராமி தான் நடிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !