22 வருஷமாயிருக்கேன் எனக்கே இப்படி நடக்குது - சீரியல் நடிகை ராணி
ADDED : 536 days ago
பிரபல சின்னத்திரை நடிகையான ராணி, ‛அலைகள், அத்திப்பூக்கள்' தொடங்கி தற்போது வரை பல சீரியல்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். பல வருடங்களாக சின்னத்திரையில் பயணித்து வரும் ராணி தனக்கே சீரியல் உலகில் மரியாதை கிடைப்பதில்லை என கூறியுள்ளார். அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‛‛22 வருஷமா சீரியலில் இருக்கிறேன். கேப் விட்டதே கிடையாது. ஒரேயொரு சீரியலில் மட்டும் தான் பாதியில் விலகினேன். அதற்கு காரணம் சீரியலில் இரவு ஷூட் வர வேண்டும் என்பதை ரொம்ப தவறான முறையில் சொன்னார்கள். எல்லாருக்கும் சுயமரியாதை இருக்கு. அவர்கள் என்னை இன்சல்ட் செய்து '' என வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.