சுந்தரி நடிகைக்கு திடீர் திருமணம்
ADDED : 579 days ago
மலையாள சின்னத்திரை நடிகையான ஸ்ரீகோபிகா நாயர், தமிழில் அன்பே வா, சுந்தரி ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவருக்கு சில தினங்களுக்கு முன் வருண் தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் ஸ்ரீகோபிகாவுக்கும் வருண் தேவுக்கும் குருவாயூர் கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதன்புகைப்படங்களை இண்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஸ்ரீகோபிகாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.