மீண்டும் எல்ரெட் குமார் தயாரிப்பில் சூரி!
ADDED : 298 days ago
கோ, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்களை தயாரித்தவர் எல்ரெட் குமார். அவரின் ஆர்.எஸ். இன்போடெயிமென்ட் நிறுவனத்தின் மூலம் இப்படங்களை தயாரித்திருந்தார். அதன் பிறகு நீண்ட வருடங்களுக்குப் பிறகு விடுதலை படத்தின் மூலம் மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் எல்ரெட் குமார்.
இதைத்தொடர்ந்து மீண்டும் நடிகர் சூரியை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை ‛செல்பி' பட இயக்குனர் மதிமாறன் இயக்குகிறார். இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுதுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.