நிருபரின் மைக்கைப் பிடுங்கி அடித்த மோகன் பாபு
 
சில தினங்களுக்கு முன்பு, மோகன் பாபு, மனோஜ் இடையே கைகலப்பு நிகழ்ந்ததாகச் சொன்னார்கள். ஆனால், பின்னர் இருவரும் அதை மறுத்தனர். இந்நிலையில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் மனோஜ். இதனிடையே, நேற்று ஹைதராபாத்தில் உள்ள மோகன் பாபுவின் வீட்டிற்கு மனோஜ் சென்றுள்ளார். அவரை உள்ளே விடாமல் மோகன் பாபுவின் செக்யூரிட்டிகள் தடுத்துள்ளனர். கேட்டை தள்ளிவிட்டு மனோஜ் உள்ளே நுழைந்துள்ளார்.
அப்போது அங்கிருந்த டிவி நிருபர்கள் பலரும் மோகன் பாபுவிடம் பேட்டி எடுக்கச் சென்றனர். அப்போது டிவி 9 நிருபரின் மைக்கைப் பிடுங்கி அவரை பலமாக அடித்துள்ளார் மோகன் பாபு. அதில் அந்த நிருபருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு கருதி மோகன்பாபுவிடம் இருந்தும், மனோஜிடம் இருந்தும் அவர்களது துப்பாக்கிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல்.