உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தண்டேல் படக்குழுவினருக்கு மீன் கறி சமைத்து பரிமாறிய நாக சைதன்யா

தண்டேல் படக்குழுவினருக்கு மீன் கறி சமைத்து பரிமாறிய நாக சைதன்யா

தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி நடிகரான நாக சைதன்யா சமீபத்தில் நடிகை ஷோபிதா துலிபாலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமண கொண்டாட்டம், தேன்நிலவு என கிட்டத்தட்ட உற்சாகமாக ஒரு மாதத்திற்கு மேல் செலவிட்ட நாக சைதன்யா தெலுங்கில் தற்போது தான் நடித்து வரும் தண்டேல் படத்தின் படப்பிடிப்பிற்கு மீண்டும் திரும்பி உள்ளார். சந்து மொண்டேட்டி என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடித்து வருகிறார். மீனவ சமுதாயத்தை மையப்படுத்தி கடலோர பகுதிகளில் நிகழும் கதையாக இது உருவாக்கப்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற கிராமத்து பகுதியில் நாக சைதன்யா அந்தப் பகுதியில் உள்ள சில மீனவர்களுடன் சேர்ந்து அங்குள்ள ஆற்றில் மீன் பிடித்து பின்பு தானே அவற்றை படப்பிடிப்பு தளத்தில் சுவையாக மீன் கறி சமைத்து படக்குழுவினருக்கும் அந்த பகுதி மக்களுக்கும் தன் கையால் விருந்து பரிமாறி உள்ளார். பிறகு தானும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளார். தனது திருமணத்திற்காக நாக சைதன்யாவே தங்களுக்கு வைத்த விருந்து இது என்று தண்டேல் படக்குழுவினர் சிலாகித்து வருகிறார்கள். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !