உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார்

இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார்

தமிழ் சினிமாவின் இயக்குனரும், தயாரிப்பாளருமான ஜெயமுருகன் மாரடைப்பு காரணமாக காலமானார்.

திருப்பூரை சேர்ந்த டி.எம் ஜெயமுருகன் 1995ல் 'சிந்து பாத்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். முரளி நடித்த ‛ரோஜா மலரே' படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். தொடர்ந்து, அடடா என்ன அழகு, தீ இவன் போன்ற படங்களையும் இயக்கினார். தனது படம் உட்பட ஓரிரு படங்களுக்கு இசையமைக்கவும் செய்தார்.

ஒருக்கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி திருப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார். திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது உடல். இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !