மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
251 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
251 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
251 days ago
தெலுங்கு திரையுலகின் இளம் நடிகரும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யா, சமீபத்தில் நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் திருமண தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஆந்திராவைச் சேர்ந்த பிரபல ஜோதிடரான வேணு சுவாமி என்பவர் நாகசைதன்யா, சோபிதா இருவரும் திருமணம் செய்து கொண்டாலும் சில வருடங்களுக்குள் அவர்களுக்குள் பிரிவு ஏற்படும் என்றும் அதுவும் ஒரு பெண்ணால் ஏற்படும் என்றும் தானாகவே ஜோதிடம் கணித்து கூறினார்.
இவரது பேச்சு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில் தெலுங்கானா உயர்நீதிமன்றம் மகளிர் உரிமை ஆணையத்திற்கு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமை ஆணையம் வேணு சுவாமியை அழைத்து விசாரித்தது. இந்த விசாரணையில் தனது தவறை முழு மனதுடன் ஒப்புக்கொண்ட வேணு சுவாமி, மகளிர் உரிமை ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக தனது மன்னிப்பையும் அளித்துள்ளார்.
251 days ago
251 days ago
251 days ago