மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
146 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
146 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
146 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
146 days ago
ஆர்.பி.டி மணி என்கிற புகழ்பெற்ற கராத்தே மாஸ்டர் சினிமாவிற்காக கராத்தே மணி ஆனார். 1944ம் ஆண்டு சென்னையில் பிறந்த மணி, சின்ன வயதிலிருந்தே தற்காப்புக் கலையான கராத்தேயில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். இதனால் இவர் ஜப்பானின் முன்னணி கராத்தே ஆசிரியர்களிடம் முறையாக கராத்தே கற்றார்.
கராத்தேயில் கறுப்புப் பட்டை பெற்ற முதல் தமிழர். கராத்தேவின் உயர்ந்த பட்டமான 'ரென்ஷி' பட்டத்தையும் இவர் பெற்றார். பின் இவர் 1965ம் ஆண்டு சென்னையில் முதல் கராத்தே பயிற்சி பள்ளியை துவக்கினார். அதோடு டோக்கியோ கராத்தே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
பல சினிமா வாய்ப்புகள் வந்தும் மறுத்து வந்த மணி ரஜினியின் வேண்டுகோளை ஏற்று 'அன்புக்கு நான் அடிமை' படத்தில் வில்லனாக நடித்தார். அதன்பிறகு 'பில்லா ரங்கா' படத்தில் ரஜினிக்கு இணையான ஒரு கேரக்டரில் நடித்தார். ரஜினியின் நெருக்கமான நண்பராக மாறினார்.
தொடர்ந்து அஞ்சாத நெஞ்சங்கள், விடியும் வரை காத்திரு, அதிசய பிறவிகள், வளர்த்த கடா, தங்ககோப்பை, நீதிக்கு ஒரு பெண் போன்ற படங்களில் நடித்தார். பெரும்பாலும் வில்லன் வேடங்கள்தான்.
இப்படி வில்லனாக நடிப்பதால் அவரது கராத்தே பள்ளிகளுக்கு படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. தனது வில்லன் இமேஜ் கராத்தே கலைக்கு இடையூறாக இருப்பதால் சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகி கராத்தே பள்ளிகளில் கவனம் செலுத்தினார்.
ஆனால் திடீரென தனது 50 வயதில் மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு பல காரணங்கள் இன்று வரை சொல்லப்பட்டு வருகிறது.
146 days ago
146 days ago
146 days ago
146 days ago