தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதலை துவங்கியது. இதற்கு நாடு முழுக்க ஆதரவு பெருகியது. தற்போது இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் இளையராஜா வெளியிட்ட பதிவில், ‛‛பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் கொன்றதை எதிர்த்து நமது வீரர்கள் எல்லைகளில் துணிச்சல் மற்றும் உறுதியுடன் செயல்படுகின்றனர். நமது தன்னலமற்ற வீரர்கள், எதிரிகளை மண்டியிடச் செய்வார்கள் என்று நான் மிகவும் நம்புகிறேன். பெருமைமிக்க இந்தியனாகவும், எம்பி.,யாகவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், நமது எல்லைகளையும் மக்களையும் பாதுகாக்கவும் நமது நாட்டின் துணிச்சலான ஹீரோக்களின் வீரம் முயற்சிகளுக்காக, எனது இசை நிகழ்ச்சி கட்டணம் மற்றும் ஒரு மாத சம்பளத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளேன்''. ஜெய் ஹிந்த்!
இவ்வாறு இளையராஜா அறிக்கையில் கூறியுள்ளார்.