உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அதிரடி போலீஸ் வேடத்தில் ஆரி

அதிரடி போலீஸ் வேடத்தில் ஆரி

'ரெட்டைச்சுழி' படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்த ஆரி அர்ஜூனா பல வருட இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆரி நடித்து முடித்துள்ள அலேகா, பகவான், டிஎன் 43, மண் போன்ற படங்கள் வெளிவராமல் இருக்கிறது. சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்று விட்டார்.

இந்த நிலையில் விஜய் மில்டன் தெலுங்கு, தமிழில் இயக்கும் படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராஜ் தருண் நாயகனாக நடிக்கிறார். 'ரப் நோட் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.

ஆரி போலீஸ் அதிகாரியாக நடிப்பது குறித்து இயக்குனர் விஜய் மில்டன் கூறும்போது “ஆரி பார்ப்பதற்கு அமைதியாக தோன்றினாலும், உள்ளுக்குள் நெருப்பு போன்றவர். அந்த அமைதி தீ இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றதாக இருந்தது. இது வெறும் சாதாரண காவலர் வேடமல்ல , உணர்ச்சிகளால் நிரம்பிய, பன்முகத்தன்மை கொண்ட நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதாபாத்திரம். அதற்கேற்ப ஆரி சரியான தேர்வாக இருந்தார்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !