முன்னாள் பிரதமர் ராஜீவ் தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்பத்தூரில் நடந்த கொதுக்கூட்டத்தில் விடுதலைபுலிகளின் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு பல ஆண்டுகளாக நடந்து இறுதியில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கருணை அடிப்படையில் அவர்கள் விடுதலையும் ஆகிவிட்டனர்.
ராஜீவ்-ன் கொலை வழக்கு தொடர்பாக ஏராளமான திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் வெளிவந்துள்ளது. தமிழில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 'குற்றப்பத்திரிகை' என்ற பெயரில் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது 'தி ஹன்ட்: ராஜீவ் காந்தி அசாஸ்னேஷன் கேஸ்' என்ற தலைப்பில் வெப் தொடராக தயாராகி உள்ளது. ஜூலை 4 ம் தேதி முதல் சோனி லிவ்வில் ஒளிபரப்பாகிறது.
இந்த தொடர் புலனாய்வு பத்திரிகையாளர் அனிருத்ய மித்ராவின் 'நைன்டி டேஸை' அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ளது. தேசிய விருது பெற்ற நாகேஷ் குக்குனூர் இயக்கி உள்ளார். அமித் சியால். கார்த்திகேயன், அமித் வர்மாவாக சாஹில் வைத், பகவதி பெருமாள், டேனிஷ் இக்பால் அமோத் காந்த், கிரீஷ் சர்மா, ராதாவினோத் ராஜு, வித்யுத் கர்க், அஞ்சனா பாலாஜி, பி சாய் தினேஷ், ஸ்ருதி ஜெயன், கவுரி மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.