உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது!

நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது!


சின்னத் திரையில் 'கனா காணும் காலங்கள்' தொடரின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஶ்ரீ. அதன் பின்னர் 'வழக்கு எண் 18/9', 'மாநகரம்', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'வில் அம்பு' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமான நடிகராக மாறினார். கடைசியாக 2023ம் ஆண்டில் வெளியான 'இறுகப்பற்று' படத்தில் ஸ்ரீ நடித்திருந்தார்.

சமீபத்தில் நடிகர் ஶ்ரீயின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலானது. அந்தப் புகைப்படத்தில் முடியின் நிறத்தை மாற்றி, உடல் மெலிந்து காணப்பட்டார்.

இந்த நிலையில், நடிகர் ஶ்ரீ, 'MAY EYE COME IN?' என்கிற ஆங்கில நாவலை எழுதியிருப்பதாக அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, 18 ஜூன் 2025, புதன்கிழமை எனது முதல் ஆங்கில நாவலான MAY EYE COME IN?-ஐ உலகிற்குப் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி. AMAZON.IN- தளத்தில் உள்ளது. உங்கள் பிரதிகளை இப்போதே பெறுங்கள் எனப் பதிவிட்டிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !