நன்றி மறந்த சகாக்களால் கேரளாவுக்கே சென்ற நடிகை
ADDED : 416 days ago
இரண்டாவது திருமணம், மகன் பிறப்புக்கு பின், மீண்டும் சினிமாவில், 'என்ட்ரி' கொடுக்க சமீபத்தில் கோலிவுட்டுக்கு வந்திருந்தார், கேரளத்து பால் நடிகை. ஆனால், அம்மணியின் ஆஸ்தான, 'ஹீரோ'க்கள் மற்றும் இயக்குனர்கள் அவரை சந்திப்பதற்கு, 'அப்பாயின்மென்ட்' கூட கொடுக்கவில்லையாம்.
இதனால், அதிர்ச்சியான நடிகை, 'ஒரு காலத்தில் என்னுடன் கூடி கும்மி அடித்த நபர்களெல்லாம் இப்படி நன்றி மறந்து விட்டனரே...' என, சக நடிகையரிடம் சொல்லி புலம்பி, மீண்டும் கேரளாவுக்கே சென்று விட்டார்.