உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன்

புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன்

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மூன்று கதாநாயகிகளில் அனுபமா பரமேஸ்வரனும் ஒருவர். தற்போது மலையாளத்திலும், தெலுங்கிலும் மாறி மாறி பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் இவருக்கு ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது தெலுங்கில் நடித்துள்ள பரதா (பர்தா) என்கிற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாக இருக்கிறது.

இதில் நடிகை சங்கீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, மலையாளத்தில் ஹிருதயம், ஜெய ஜெய ஹே உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த தர்ஷனா ராஜேந்திரன் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்துள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

அப்போது அனுபமாவிடம் கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்கள், தெலுங்கு திரைப்படங்களில் உங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் சில நொடிகள் கண்கலங்கி எமோஷனல் ஆகிவிட்டார். அருகில் இருந்த இயக்குனர் உள்ளிட்டோர் அவரை ஆறுதல் படுத்தினார்கள். அதன் பிறகு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “இங்கு இருக்கும் ரசிகர்கள் என்னை ஒரு ஹீரோவாக நடத்துகிறார்கள். அது என்னுடைய பாக்கியம். அதை நான் அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !