உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன்

யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன்


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மதராஸி' திரைப்படம் நாளை ரிலீசாகிறது. படம் பற்றி சிவகார்த்திகேயன் கூறுகையில், ''நான் இவ்வளவு ஆக்சன் காட்சிகளுடன் கூடிய படங்களில் நடித்ததில்லை. இது முற்றிலும் மாஸ் கமர்ஷியல் ஆக்சன் படமாக இருக்கும். ஏஆர் முருகதாஸ் ரொம்ப கூல்லான இயக்குனர்.

இந்த படத்தில் அரசியல் மெசேஜ் இல்லை. அமரன் எதிர்பார்ப்பில் மக்கள் வருவார்கள் என்பது உண்மைதான். மதராஸி பார்த்தபிறகு அவர்களின் ரியாக்சன் பார்க்க வெயிட் பண்ணுறேன். நடிகர் ரஜினிகாந்தின் பயோபிக்-ல் நடிக்க ஆசை. காமெடி படங்களில் மட்டுமல்லாமல் எல்லா வகையான படங்களிலும் நடிக்க ஆசை. யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை; நான் என் இடத்தில் இருக்கிறேன். அடுத்து நான் நடிக்கும் பராசக்தி படம் 60களில் நடக்கும் கதையாக உருவாகிறது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

முருகன்
2025-09-04 22:22:12

பிடிக்கவும் முடியாது நாளை வரும் படத்தில் இது உறுதியாகும்