மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
ADDED : 47 days ago
நடிகர் தனுஷ் தற்போது தமிழில் ‛இட்லி கடை' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபம் மாதம் திரைக்கு வருகிறது. அடுத்து விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதையடுத்து ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் இயக்கத்திலும் தனுஷ் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் தனுஷ் வாத்தி, குபேரா ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு தெலுங்கு படக்குழு உடன் இணைந்து நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விராட பருவம் இயக்குனர் வேணு உடுகுலா இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான யு.வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். கடந்த வாரத்தில் இந்த படத்திற்கான கதை விவாத பணிகள் துவங்கியதாக கூறப்படுகிறது.