உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால்

விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால்


நடிகை காஜல் அகர்வால் கார் விபத்தில் சிக்கியுள்ளதாகவும், இறந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவின. இந்த செய்திகளில் உண்மை இல்லை என நடிகை காஜல் அகர்வால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்து உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், ''நான் விபத்தில் சிக்கி விட்டதாகவும், உயிருடன் இல்லை என்றும் சில அடிப்படை ஆதரமற்ற செய்திகள் பரவி வருகிறது. இதனை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன். நான் கடவுளின் அருளால் நலமாக உள்ளேன். உயிருடனும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். இ

துபோன்ற வதந்திகளை யாரும் நம்பவோ, பரப்பவோ வேண்டாமென்று தயவு கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன். உண்மையையும், நேர்மறை விஷயங்களையும் நாம் பரப்புவோம்'' எனப் தெரிவித்துள்ளார்.

காஜல் தொடர்பாக அவ்வப்போது வதந்தி பரவிவரும் நிலையில், அவர் உயிருடன் இல்லை என்றுகூட வதந்தியை பரப்பிகின்றனர் சிலர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள காஜலின் அறிக்கையால், அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !