உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எனக்கே கதை புரியலை: 'சக்தித் திருமகன்' குறித்து விஜய் ஆண்டனி

எனக்கே கதை புரியலை: 'சக்தித் திருமகன்' குறித்து விஜய் ஆண்டனி


நடிகர் விஜய்ஆண்டனி நடிக்கும் சக்தித்திருமகன் பட நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் பேசிய விஜய்ஆண்டனி, ''19 படங்களில் ஹீரோவாக, சில படங்களில் கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறேன். அந்த வகையில் நடிப்பில் இது 25வது படம். அடுத்து வரிசையாக படங்கள் கைவசம் இருக்கின்றன.

சசி இயக்கத்தில் உருவாகும் 'நுாறுசாமி' படம் பெரிதாக பேசப்படும். தொடர்ச்சியாக படங்களை தயாரித்து வருகிறேன். இன்னும் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்போகிறேன். ஆகவே, என் பட நிறுவனத்தை பப்ளிக் லிமிடட் கம்பெனியாக மாற்றப்போகிறேன். எனக்கு நடிப்பை விட, படம் இயக்க, இசையமைக்கவே ஆர்வம். நான் தயாரிக்க இருந்த படங்களில் மற்ற நடிகர்கள் நடிக்க முடியாத காரணத்தால் நான் நடிகர் ஆனேன்'' என்றார்.

'சக்தித்திருமகன்' படத்தை 'அருவி, வாழ்' படங்களின் இயக்குனர் அருண்பிரபு இயக்கி உள்ளார். இந்த படம் குறித்து பேசிய விஜய்ஆண்டனி, ''இது சில அரசியல் விஷயங்களை நேரடியாக பேசுகிறது. நானே அவரை அழைத்து கதை கேட்டேன். பிற்பாதி கதை எனக்கு புரியவில்லை. பின்னர், அவர் விலாவரியாக விளக்கினார். அடுத்தும் அவர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கப்போகிறேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !