உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி!

'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி!


நடன மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் நாயகனாக நடித்துள்ள படம் 'கிஸ்'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக 'அயோத்தி' படத்தில் நடித்த பிரீத்தி அஸ்ராணி நடிக்க, பிரபு, தேவயானி, யுடிவி கணேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற செப்டம்பர் 19ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. லிப் லாக் கொடுப்பதை வைத்தே காதலர்களின் முடிவை தெரிந்து கொள்ளலாம் என்ற கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி கதை சொல்லியாக தன்னுடைய குரலை கொடுத்திருக்கிறார். இந்த தகவலை கிஸ் படக்குழு ஒரு வீடியோ வெளியிட்டு அறிவித்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !