உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளான் இருக்கு, ஆனா, எதுவும் முடிவாகல : கமல் படம் குறித்து ரஜினி கருத்து

பிளான் இருக்கு, ஆனா, எதுவும் முடிவாகல : கமல் படம் குறித்து ரஜினி கருத்து


நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன் மீண்டும் இணைந்து நடிக்கப் போவதாக ஒரு செய்தி சமீபத்தில் வெளிவந்தது. ஒரு விருது விழாவிலும் அது பற்றி கமல்ஹாசன் பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று விமான நிலையத்தில் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த் அது குறித்து பேசுகையில், “அடுத்து ரெட்ஜெயன்ட், ராஜ்கமல் பிலிம்ஸ் இரண்டு நிறுவனத்துக்கும் சேர்ந்து ஒரு படம் பண்ணப் போறேன். இன்னும் டைரக்டர் முடிவாகல. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும்னு ஆசை. கரெக்டான கதை, கதாபாத்திரம் கிடைக்கணும். கிடைச்சா ஆக்ட் பண்ணுவேன்,” என்றார்.

ஆக, லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்தை இயக்குவார் என்று வந்த செய்திகள் பொய் என்பது ரஜினியின் பேச்சு மூலம் உறுதியாகி உள்ளது. சரியான கதை, கதாபாத்திரங்கள் அமைந்தால் மட்டுமே இருவரும் இணைந்து நடிப்பார்கள் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

நிவேதா, Dindigul
2025-09-18 08:19:17

ஜெயிலர் படத்தில் மோகன்லால் போன்றவர் கௌரவ தோற்றத்தில் நடித்தது மாதிரி, தில்லுமுல்லு படத்தில் கமல் கௌரவ வேடத்தில் நடித்த மாதிரி, ஜெயிலர் 2 படத்தில் கமலுக்கு எதோ ஒரு கௌரவ தோற்றம் கொடுத்தாலே உங்கள் இருவரின் ஆசையும் நிறைவேறி விடுமே.