உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல்

விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல்

தமிழில் இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே, பிளாக்மெயில் போன்ற த்ரில்லர் கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் மு.மாறன். குறிப்பாக இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான 'பிளாக் மெயில்' படம் எதிர்பார்த்த பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் விஜய் ஆண்டனி அடுத்து தயாரித்து, நடிக்கவுள்ள புதிய படத்தை மு. மாறன் இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இதுவும் முழுக்க முழுக்க த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக தான் உருவாகும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !