நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது
ADDED : 7 minutes ago
தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் நாகர்ஜூனா. சமீபத்தில் இவர் தமிழில் கூலி, குபேரா ஆகிய படங்களில் நடித்திருந்தார். சில மாதங்களாக நாகர்ஜூனாவின் 100வது படம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இந்த படத்தை ‛நித்தம் ஒரு வானம்' படத்தை இயக்கிய ரா.கார்த்திக் இயக்குகிறார். நேற்று இந்த படத்தை பூஜை நிகழ்ச்சியுடன் துவங்கியுள்ளனர். இதை அன்னபூர்ணா ஸ்டுடியோ தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். குடும்ப கதைக் களத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் இடம் பெறுகின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.