உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2வது வாரத்தில் கூடுதல் தியேட்டர்களில் 'காந்தாரா சாப்டர் 1'

2வது வாரத்தில் கூடுதல் தியேட்டர்களில் 'காந்தாரா சாப்டர் 1'


ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'காந்தாரா சாப்டர் 1'. இப்படம் ஒரு வாரத்தில் 509 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலக அளவிலான மொத்த வசூலை மட்டும் படக்குழு வெளியிட்டுள்ளது.

பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் விசாரித்த வரையில் கர்நாடகாவில் 130 கோடி, ஹிந்தியில் 130 கோடி,தெலுங்கானா, ஆந்திராவில் 90 கோடி, வெளிநாடுகளில் 80 கோடி, தமிழகத்தில் 35 கோடி, கேரளாவில் 35 கோடிகளை இந்தப் படம் கடந்திருக்கும் என்று தகவல் சொல்கிறார்கள்.

கன்னடத் திரையுலகத்தில் 500 கோடியைக் கடந்த இரண்டாவது படம் என்ற பெருமையை 'காந்தாரா சாப்டர் 1' பெற்றுள்ளது. இதற்கு முன்பு 'கேஜிஎப் 2' படம் 1200 கோடி வசூலைப் பெற்றுள்ளது. மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு கன்னடப் படம் 500 கோடி வசூலைக் கடந்துள்ளது.

இருப்பினும் இன்னும் 100 கோடி வசூல் கடந்த பிறகுதான் இந்தப் படம் லாபத்தில் அடியெடுத்து வைக்கும் என்பதும் கூடுதல் தகவல். சுமார் 350 கோடி வரை இப்படத்திற்கான தியேட்டர் வியாபாரம் நடந்துள்ளதாம்.

இன்று இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள இந்தப் படத்திற்கு மேலும் கூடுதல் தியேட்டர்களைக் கொடுத்துள்ளார்கள். இந்த வார இறுதி வசூல் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !