உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சித்திரம் பேசுதடி ஹீரோயினுக்கு சாருனு பெயர் வைத்தது ஏன்? மிஷ்கின்

சித்திரம் பேசுதடி ஹீரோயினுக்கு சாருனு பெயர் வைத்தது ஏன்? மிஷ்கின்


சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் மிஷ்கின் பேசுகையில், ''இப்போது படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றால் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். என்னுடைய முதல் படமான சித்திரம் பேசுதடியில் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அந்த படம் முதல் 7 நாட்கள் ஓடவில்லை. அப்புறம்தான் ஹிட் ஆனது. அந்த சமயத்தில் நான் உற்சாகம் இல்லாமல் இருந்தேன். படங்களுக்கு தலைப்பு வைப்பது, அதை டிசைன் செய்வது தனிக்கதை. அதில் மணிரத்னம் வல்லவர். அவரின் படத்தலைப்பு, அந்த டிசைன் வித்தியாசமாக இருக்கும். பார்வையாளர்களை டக்கென கவரும்.

அதேபோல், ஒரு இயக்குனர் தன் பட ஹீரோயின்களுக்கு பெயர் வைப்பதிலும் ரகசியம் இருக்கிறது. அவருக்கு பிடித்த பெயரை, பல காலம் மனதில் சொல்லி பார்த்த பெயரை தான் வைப்பார். என் முதல் படமான சித்திரம்பேசுதடி ஹீரோயின் பெயர் சாரு. அது, சத்யஜித் ரே பட பாதிப்பில் வைத்தேன். இப்போது நடிகராக சில படங்களில் நடிக்கிறேன். அந்த வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது. என்னை படக்குழுவினர் நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள்'' எனப் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !