உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்ரீலங்காவில் நடைபெறும் ராம்சரணின் 'பெத்தி' படப்பிடிப்பு

ஸ்ரீலங்காவில் நடைபெறும் ராம்சரணின் 'பெத்தி' படப்பிடிப்பு


சமீபகாலமாக தென்னிந்திய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ஸ்ரீலங்காவில் அதிகம் நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்னதாக விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்', மோகன்லால், மம்மூட்டி நடிக்கும் 'பேட்ரியாட்' ஆகிய படங்களின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது. அந்த வகையில் தற்போது இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் 'பெத்தி' பட படப்பிடிப்பின் புதிய ஷெட்யூல் இலங்கையில துவங்கி உள்ளது. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்திற்காக இலங்கையின் உள்ள மிக பிரசித்தி பெற்ற குகை ரயில் பாதை ஒன்றை லொகேஷன் ஆக தேர்வு செய்து அதில் படத்திற்கான முக்கியமான சில காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் படமாக்கி வருகிறார்கள். அந்த லொகேஷனில் இருந்து எடுத்த புகைப்படங்களை தற்போது பெத்தி படக்குழுவினர் பகிர்ந்து கொண்டுள்ளனர். 2026 மார்ச் 27ம் தேதி இந்த படம் ராம்சரணின் பிறந்த நாளன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !