உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு

ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு


தமிழ் சினிமாவில் புகழ் அடைந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமானது 'ராம்பந்து' என்ற தெலுங்கு படத்தில்தான். தமிழில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும் 'அட்டகத்தி' படம்தான் அவரை அடையாளம் காட்டியது. அதன் பிறகு தமிழில் முன்னணி நடிகை ஆனார்.

தெலுங்கில் 'கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி, மிஸ்மேட்ச், வேர்ல்ட் பேமஸ் லவ்வர், தக் ஜெகதீஸ், ரிபப்ளிக்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக 'சங்கராந்தகி வஸ்துனம்' படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் அடுத்த தெலுங்கு படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்னும் டைட்டில் வைக்காத இந்த படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மஹேஸ்வர் ரெட்டி தயாரிக்கிறார். குஷேந்தர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். பரத் மஞ்சிராஜு இசையமைக்கிறார்.

வீர் நாயகனாக நடிக்கிறார், பரத் தர்ஷன் இயக்குகிறார். இந்த படத்தின் துவக்க விழா ஹைதராபாத்தில் நடந்தது. படப்பிடிப்பு வரும் 19ம் தேதி தொடங்குகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !