உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ்

பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ்

சினிமா மற்றும் கலாச்சாரத்தின் ஒரு மைல்கல் கொண்டாட்டமாக, இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகளாவிய நிகழ்வு படங்களில் ஒன்று அவதார் : பயர் அண்ட் ஆஷ். ஜேம்ஸ் கேமரூனின் அற்புத படைப்பான அவதார் படத்தின் மூன்றாம் பாகம் உலகளவில் அடுத்தவாரம் வெளியாகிறது. இதையொட்டி பனாரஸில் உள்ள கங்கையின் புனிதக் கரையில் அதன் சிறப்பு தேவநாகரி திரைப்பட லோகோ வெளியிடப்பட்டது. இது இந்தியாவின் ஆன்மிக மையப் பகுதியையும் உலகின் மிகவும் சின்னமான சினிமா பிரபஞ்சங்களில் ஒன்றையும் ஒன்றிணைக்கிறது.

இந்தப் புதிய காட்சி அடையாளம் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை கவுரவிக்கிறது. அதே நேரத்தில் படத்தின் முக்கிய அம்சங்களான நெருப்பு, ஒளி மற்றும் மாற்றத்தை பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜஸ்டின் - உதய் இரட்டையர்களின் இசை நிகழ்ச்சியும் நடந்தது. மேலும் படத்தின் அடிப்படை கருப்பொருள்களான நெருப்பு மற்றும் சாம்பலால் ஈர்க்கப்பட்டு, சீசர் நடனமும் நடந்தது.

அவதார் 3 படம் உலகம் முழுவதும் டிச.,19ல் வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 6 மொழிகளில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !