நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம்
தமிழ் திரை உலகில் 10 வருடங்களுக்கு முன்பு வரை தனது ரசிகர்களை மச்சான் என அழைத்து குஷிப்படுத்தும் ஒரு கவர்ச்சிகரமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை நமீதா. அதன்பிறகு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகி தற்போது அரசியல் கட்சியிலும் இணைந்து தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தேனியில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் நமீதா.
இந்த விழாவில் செய்தியாளர்களிடம் நமீதா பேசியபோது, “மீண்டும் சினிமாவிற்கு நடிக்க வருவதற்கு விருப்பம் தான். அதே சமயம் 'படையப்பா' படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் போல காலம் கடந்தும் நம்மை பற்றி பேச வைக்கும் படமாக, கதாபாத்திரமாக இருக்க வேண்டும். மேலும் பாலிவுட் நடிகைகள் வித்யா பாலன் மற்றும் ராதிகா ஆப்தே போன்றவர்கள் அருமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார்கள்.. அவர்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு கதாபாத்திரங்களை தேர்வு செய்ய விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.