உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப்

மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப்

மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஜீத்து ஜோசப் இயக்கினார். அதன்பிறகு அப்படத்தை தமிழிலும் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்தார். பின்னர் திரிஷ்யம் 2-ம் பாகத்தையும் மோகன்லால், மீனா நடிப்பில் இயக்கியவர், தற்போது திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்தையும் மோகன்லால்- மீனாவை வைத்தே இயக்கி உள்ளார். இப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது .

இந்த நிலையில் திரிஷ்யம் படத்தின் நான்காவது பாகமும் உருவாகிறதா? என்று இயக்குனர் ஜீத்து ஜோசப் இடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, மூன்றாம் பாகத்திற்கு பிறகு கதையை மேலும் வளர்க்கும் எந்த எண்ணமும் என்னிடத்தில் இல்லை. இதற்கு மேலும் இந்த கதையை இழுத்தால் சுவராஸ்யம் குறைந்து விடும். அதனால் இந்த மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் படம் முடிவடைகிறது என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !