உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்!

சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்!


'புஷ்பா -2' படத்தை அடுத்து அட்லி இயக்கும் சயின்ஸ் பிக்சன் படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இப்படத்தில் அவருடன் தீபிகா படுகோனே, மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் நடிப்பதற்கு அல்லு அர்ஜுன் வாங்கும் சம்பளம் குறித்த ஒரு தகவல் தற்போது டோலிவுட் மீடியாக்களில் வெளியாகியுள்ளது.

அதில், அட்லி இயக்கும் இந்த படத்தில் தான் நடிப்பதற்கு சம்பந்தப்பட்ட பட நிறுவனத்திடம் படத்தின் லாபத்தில் தனக்கு 30 சதவீதம் ஷேராக தரவேண்டும் என்று அவர் பேசி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதேபோல்தான் புஷ்பா-2 படத்திலும் வசூலில் 27 சதவீதம் ஷேர் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் புஷ்பா 2 திரைப்படம் வசூலித்த நிலையில் இந்த படத்திற்கான ஷேர் ஆக அல்லு அர்ஜூன் 270 கோடி பெற்றிருப்பார் என்கின்றனர். இந்த கணக்கின்படி பார்த்தால் ரஜினி, விஜய் மட்டுமல்ல ஹிந்தி நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்கிற பெயரை அல்லது அர்ஜுன் பெற்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், தற்போது 'வாரணாசி' படத்தை இயக்கி வரும் இயக்குனர் ராஜமவுலியும் அந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை தனது சம்பளமாக தருமாறு பட நிறுவனத்திடம் பேசி இருப்பதாகவும் டோலிவுட் வட்டார தகவல் தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !