கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம்
ADDED : 135 days ago
‛டிராகன்' என்ற முதல் படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை கயாடு லோகர். தொடர்ந்து ‛இதயம் முரளி, இம்மார்டல், சிம்புவின் 49வது படம்' ஆகிய படங்களில் கமிட்டாகி உள்ளார். மலையாளம், தெலுங்கிலும் நடித்து வருகிறார். இந்தாண்டு இவரது பல படங்கள் மூன்று மொழிகளிலும் வெளியாக உள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவரிடம், உங்களிடம் எதை மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள் என்ற கேள்வி எழுந்தது.
அதற்கு பதிலளித்த கயாடு, ‛‛நான் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவள். என் பிரச்னையும் அதுதான். இதனால் எளிதில் மனம் உடைந்துவிடுவேன். இந்த விஷயத்தை மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். மேலும் எந்த சூழலிலும் தடுமாற்றம் இன்றி என்னை வலிமையானவளாய் மாற்ற விரும்புகிறேன்'' என்றார்.