உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 7 வருடங்களுக்குப் பிறகு தேவ் பட இயக்குனருக்கு கிடைத்த வாய்ப்பு!

7 வருடங்களுக்குப் பிறகு தேவ் பட இயக்குனருக்கு கிடைத்த வாய்ப்பு!

கடந்த 2019ம் ஆண்டில் தமிழில் கார்த்தி நடித்து வெளிவந்த 'தேவ்' படத்தை அப்போது அறிமுக இயக்குனரான ரஜத் ரவிசங்கர் என்பவர் இயக்கினார். ரகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடித்தார். இப்படம் தோல்வியை தழுவியது. இதனால் ரஜத் ரவிசங்கரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. தற்போது ஏழு வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் ஒரு புதிய படத்தை இவர் இயக்கவுள்ளார். இதை யுவசுதா ஆர்ட்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கின்றனர். கதாநாயகனாக தெலுங்கு சினிமாவில் வளர்ந்து இளம் நடிகரான விஸ்வாக் சென் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !