20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி
இயக்குனர் கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள படம் 'டாக்சிக்' . கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுட்டாரியா, ருக்மணி வசந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தில் பாலிவுட் நடிகையான சஞ்சீதா ஷேக் கதையை நகர்த்துக்கின்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
இவர் கடந்த 2005ம் ஆண்டில் தமிழில் ரவி கிருஷ்ணா, கோபிகா, ரேவதி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்திருந்தார். அதோடு 2006ம் ஆண்டில் கன்னடத்தில் சுபம் எனும் படத்தில் நடித்தார். இப்போது 20 வருடங்களுக்கு பிறகு டாக்சிக் படத்தின் மூலம் தென்னிந்திய படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இப்படம் இந்த ஆண்டு மார்ச் 19ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.