உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்?

ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்?


நடிகர் ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற தனியார் டிவி ஷோ மூலமாக பிரபலமானவர் அபர்ணதி. அந்த நிகழ்ச்சியில் அவரை ஆர்யா திருமணம் செய்யவில்லை. அது ஒரு ஸ்கிரிப்ட் நிகழ்ச்சி என்று அனைவருக்கும் புரிந்தது. அடுத்து தேன், இறுகப்பற்று, ஜெயில், உடன்பால்(வெப்சீரியஸ்) படங்களில் அபர்ணதி நடித்தார். இப்போது 'வெஞ்சன்ஸ்' என்ற படத்தில் கதைநாயகியாக நடித்து வருகிறார். அடுத்த மாதம் படம் ரிலீஸ். ராகுல் அசோக் இயக்கியுள்ளார்.

இந்த படம் குறித்து பேசியுள்ள அபர்ணதி, ''நான் முதன்முறையாக கலெக்டராக, அதுவும் கதைநாயகியாக நடித்துள்ளேன். அரசியல் விஷயங்களை ஆழமாக கதை பேசுகிறது. ஜான் விஜய், ஒய்ஜி மகேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். நயன்தாரா நடித்த அறம் படத்துக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. எனக்கு ஆக்ஷன் காட்சிகளும் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் எந்த கட்சியையும், எந்த கொள்கையையும் நாங்கள் சீண்டவில்லை.
எனக்கு ஆர்யாவுடன் நடிப்பதில் விருப்பம் இல்லை. அவருடன் அந்த ஷோவில் பல வாரங்கள் ஒன்றாக நடித்தது மனதில் பசுமையாக இருக்கிறது. அதை, ஒரு படத்தில் ஹீரோயினாக, வேறு கேரக்டரில் நடித்து அழிக்க விரும்பவில்லை. மற்றபடி ஆர்யாவுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !