உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஓட்டல் நடத்திய முதல் நடிகர்

பிளாஷ்பேக்: ஓட்டல் நடத்திய முதல் நடிகர்


இன்றைய காலகட்டத்தில் நடிகர்கள் சினிமா வருமானத்தை மட்டும் நம்பியிராமல் வேறு தொழிலும் செய்கிறார்கள். அதில் ஒன்று ஓட்டல் நடத்துவது, ஆர்யாவும், சூரியும் தற்போது ஓட்டல்களை நடத்தி வருகிறார்கள். கருணாஸ் சில காலம் நடத்தினார். ஆனால் முதன் முதலாக ஓட்டல் நடத்திய நடிகர் ஏ.கருணாநிதி.

அந்தக் காலத்தில் நடிகர்கள் அதிகம் பணம் சம்பாதித்தால் தியேட்டர் கட்டுவார்கள், இல்லாவிட்டால் படம் தயாரிப்பார்கள். ஆனால் முதன் முதலில் ஓட்டல் வைத்தவர் கருணாநிதி. சென்னை தியாகராய நகரில் 'மாமியார் ஓட்டல்' என்ற பெயரில் நடத்தினார். அன்றைக்கு சென்னையில் உள்ள புகழ்பெற்ற அசைவ ஓட்டல்களில் ஒன்றாக இருந்தது. நடிக்காத நாட்களில் தானே ஓட்டலுக்கு சென்று பணியாற்றுவார். இதற்காகவே அந்த ஓட்டலில் கூட்டம் கூடிய நாட்களும் உண்டு.

காளி என்.ரத்னம் என்ற நடிகர்தான் முதல் முதலில் பாடி லேங்குவேஜ் எனப்படும், உடல்மொழி காமெடியை கொண்டு வந்தார். அவருக்கு பிறகு ஏ.கருணாநிதிதான் உடல்மொழி காமெடி செய்தார். 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் அரண்மனை சமையல்காரன் வேடத்தில் நடித்தார். அவரது நடிப்பை பார்த்து வியந்த இயக்குனர் பந்துலு அவரது கேரக்டரை ஒற்றனாக மாற்றி பல காட்சிகளை வைத்தார். இதே போன்று 'அதே கண்கள்' படத்திலும் மலையாள சமையல்காரனாக நடித்து மலையாளம் கலந்த தமிழ் பேசினார். டி.பி.முத்துலட்சுமிக்கு ஜோடியாக அதிகமான படங்களில் நடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !