பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி
ADDED : 8 minutes ago
நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ரஷ்மிகா மந்தனா ஆகியோருக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு உதய்ப்பூரில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த அன்றே டில்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து அவர்களது திருமண வரவேற்புக்கு அழைப்பு விடுத்தனர்.
பிரதமருடனான சந்திப்பு குறித்து ராஷ்மிகா மந்தனா, பிரதமருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியையும் பகிர்ந்து, சற்று முன்பு எக்ஸ் தளத்தில், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஐயா, நமது கலாச்சாரம் மற்றும் வரலாறு பற்றிப் பேசுவதில் நேரத்தைச் செலவிட்டது மிகவும் சிறப்பு வாய்ந்தது. என் பெற்றோருக்கு அவர் எழுதிய சிந்தனைமிக்க கடிதம்தான் மிகவும் இனிமையான ஆச்சரியம். சில தருணங்கள் என்றென்றும் உங்களுடன் இருக்கும்..,” என்று குறிப்பிட்டுள்ளார்.