துபாயில் சிக்கி தவிக்கும் அண்ணன்; ஹைதராபாத்தில் 3வது திருமண விழா நிகழ்வை கொண்டாடிய தம்பி
சமீப நாட்களாக ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் நம்மூரில் இருந்து அங்கே பல்வேறு நிகழ்வுகளுக்காக சென்றிருந்த சினிமா மற்றும் பல்வேறு பிரபலங்கள் இந்தியா திரும்ப முடியாமல் அங்கே தவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சீனியர் நடிகர் மோகன்பாபுவின் மகனும் நடிகரும் நடிகர் சங்கத் தலைவருமான விஷ்ணு மஞ்சு தனது குடும்பத்துடன் தற்போது துபாயில் இந்த இக்கட்டான சூழலில் தான் சிக்கிக் கொண்டு இருக்கிறார். அதே சமயம் தாங்கள் பத்திரமாக இருப்பதாகவும் அவர்கள் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
இன்னொரு பக்கம் கடந்த சில வருடங்களாகவே விஷ்ணு மஞ்சு மற்றும் அவரது தம்பியான மஞ்சு மனோஜுக்கும் இடையே ஒரு சகோதர யுத்தம் நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மஞ்சு மனோஜ் பூமா மவுனிகா ரெட்டி என்பவரை மறுமணம் செய்து கொண்ட பிறகு அதன் காரணமாகவே சகோதரர்களுக்குள் மிகப்பெரிய விரிசல் விழுந்தது. இந்த நிலையில் தனது மூன்றாவது திருமண நிகழ்வை மனைவி மற்றும் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடிய மஞ்சு மனோஜ் அது குறித்த புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.