உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சமூக வலைதளத்தில் ஆபாச பதிவுகள்: லாவண்யா திரிபாதி போலீசில் புகார்

சமூக வலைதளத்தில் ஆபாச பதிவுகள்: லாவண்யா திரிபாதி போலீசில் புகார்


தமிழில், சசிகுமாரின், 'பிரம்மன்', சி.வி.குமாரின் 'மாயவன்' படங்களில் நடித்தவர் லாவண்யா திரிபாதி. தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கி நடித்து வந்த அவர், நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகனும் நடிகருமான வருண் தேஜை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து, தன்னைப் பற்றியும் தனது குடும்பம் பற்றியும் தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாக ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸில் அவர் புகார் அளித்துள்ளார்.

புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு குறிப்பிட்ட (அதன் பெயரை குறிப்பிட்டுள்ளார்) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் தவறான மற்றும் அவதூறான கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். அந்த பக்கத்தில் எனக்கு எதிராக மட்டுமல்லாமல் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் எதிராக ஆட்சேபனைக்குரிய பதிவுகள் மற்றும் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கை, நற்பெயர் ஆகியவற்றுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்திலேயே குறிப்பிட்ட நபர் செயல்படுகிறார்.

பல பதிவுகள் மற்றும் கருத்துகளில் ஆபாசமான மொழி மற்றும் எனது குணம் மற்றும் ஒழுக்கத்தை கேள்விக்குட்படுத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அந்த பதிவுகளின் நோக்கமே தீங்கிழைக்கும் வகையிலும், என்னை பொதுவழியில் அவமானப்படுத்தும் வகையிலும் உள்ளது. இன்ஸ்டாகிராம் கணக்கை இயக்கும் நபரை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து சைபர் கிரைம் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !