தெலுங்கு படத்தை இயக்க தயாராகும் அஸ்வத் மாரிமுத்து
ADDED : 10 hours ago
ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதனை வைத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கிய ‛டிராகன்' சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சிம்புவின் 51வது படத்தை இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இடையில் ரஜினி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு இவர் கதை கூறியுள்ளார் என்கிற தகவல் உள்ளது. இந்நிலையில் அஸ்வந்த் மாரிமுத்து, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த கதையில் பெரும்பாலும் தெலுங்கு கதாநாயகன் தான் நடிக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். சிம்பு அரசன் படத்தில் இருப்பதால் தெலுங்கு படத்தை இயக்கிவிட்டு சிம்பு படத்திற்கு வருவாரா அல்லது சிம்பு படத்தை முடித்துவிட்டு தெலுங்கு படத்தை இயக்குவாரா என்பது விரைவில் தெரிய வரும்.