தியேட்டருக்கு வராமல் நேரடியாக ஒடிடியில் வெளியாகும் மம்முட்டியின் படயாத்ரா
ADDED : 1 days ago
மலையாள திரையுலகில் பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது தனது 84வது வயதிலும் மம்முட்டியை வைத்து படயாத்ரா என்கிற படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே மம்முட்டியை வைத்து ஆனந்தராம், விதேயம், மதிலுகள் உள்ளிட்ட சில படங்களை இவர் இயக்கியுள்ளார்.
அதேசமயம் படயாத்ரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதை தவிர்த்து விட்டு நேரடியாகவே ஓடிடியில் வெளியாகலாம் என்கிற ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்ல அப்படி ஓடிடியில் வெளியாவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளவும் இருக்கிறது என்கிற தகவலும் தற்போது கசிந்துள்ளது.