பிளாஷ்பேக் : தனக்கு எழுதிய கதையில் ராமராஜனை நடிக்க வைத்த ராஜ்கிரண்
ஆரம்ப காலங்களில் ராஜ்கிரண் சினிமா விநியோகஸ்தராக இருந்தார். பின்னர் தயாரிப்பாளராகி சிறிய பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வந்தார். அவருக்கு நடிக்கும் ஆசையும் இருந்தது. தான் நடிப்பதெற்கென்றே ஒரு கதையும் எழுதினார். அதைதானே தயாரித்து, நடிக்கவும் முடிவு செய்தார். ஆனால் அவரது நண்பர்கள் இந்த கதைக்கு நீங்கள் பொருத்தமாக இருக்க மாட்டீர்கள், முரட்டுத்தனமான உங்கள் தோற்றம் இதற்கு பொருந்தாது என்று கூறிவிட்டார்கள். இதனால் தான் நடிப்பதை ஒத்தி வைத்த ராஜ்கிரண். அந்த கதையில் ராமராஜனை நடிக்க வைத்து தயாரித்த படம்தான் 'என்னப் பெத்த ராசா'.
இந்த படத்தில் ராஜ்கிரண் நாயகனாக நடிக்க முடியாவிட்டாலும், கதையை முடித்து வைக்கும் ஜானி என்கிற கேரக்டரில் அவர் நடித்திருந்தார். இந்த படத்தில் ராமராஜன் ஜோடியாக ரூபினி நடித்திருந்தார், ஸ்ரீவித்யா, வினு சக்கரவர்த்தி, கவுண்டமணி ஆகியோரும் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். சிராஜ் இயக்கி இருந்தார்.