பிரபாஸின் பவுசி படக்குழுவில் ஒருவர் சாலை விபத்தில் மரணம் ; படப்பிடிப்பு தற்காலிக நிறுத்தம்
'தி ராஜா சாப்' படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் ஒரு பக்கம் 'ஸ்பிரிட்', இன்னொரு பக்கம் 'பவுசி' ஆகிய படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. அந்த வகையில் இயக்குனர் ஹனுராகவ புடி இயக்கத்தில் சமீபத்தில் பவுசி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படக்குழுவினரின் ஒருவர் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் விசாரணைக்காகவும் தற்காலிகமாக பவுசி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்கிய நிலையில் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.