உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துருவ் விக்ரமுக்கு அடுத்த சிக்கல்: கால்ஷீட் பிரச்னை தொடர்பாக நாளை பிரஸ்மீட்

துருவ் விக்ரமுக்கு அடுத்த சிக்கல்: கால்ஷீட் பிரச்னை தொடர்பாக நாளை பிரஸ்மீட்


விக்ரம் மகன் துருவ் விக்ரமிற்கு சில நாட்களாக நேரம் சரியில்லை. அவர் மீது மறைமுகமாக குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியிருக்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தனது காதலன் தன்னை துன்புறுத்தினார். அவர் அந்நியனாக, அம்பியாக, ரெமோவாக இருந்தார். அந்த காதலால் தான் பலவகைகளில் பாதிக்கப்பட்டேன் என்று பேட்டி கொடுக்க, அது வைரல் ஆகியுள்ளது.

நேரடியாக துருவ் மீது குற்றம் சாட்டாவிட்டாலும் சமூக வலைதளங்களில் துருவ் விக்ரமை ஒரு வில்லன் ரேஞ்சுக்கு சித்தரித்து ஏகப்பட்ட பதிவுகள். துருவ் விக்ரம் செயல்களை விமர்சித்து ஏகப்பட்டபேர் வீடியோவில் பேசி வருகிறார்கள். இதுவரை அனுபமா குற்றச்சாட்டு குறித்து துருவ் பதில் அளிக்கவில்லை.

இந்நிலையில், அடுத்த அதிரடியாக அவர் மீது பரபரப்பு புகார் கொடுக்க ஒரு நிறுவனம், இயக்குனர் தயாராகி வருகிறார். நாளை மதியம் 3 மணிக்கு துருவ் விக்ரம் குறித்து பிரஸ்மீட் வைத்து அவர் மீதான தவறுகளை சொல்வதாக அறிவித்துள்ளார். அதென்ன பிரச்னை என்று விசாரித்தால், நீலாத்திரி என்ற நிறுவனம் தயாரிக்க, ரமேஷ்வர்மா என்பவர் இயக்கும் படத்தில் துருவ் கமிட்டானார். அதற்கு முன்பணமாக பெரிய தொகை பெற்றார். துருவ் விக்ரம் 4வது படமாக அந்த படம் உருவாக இருந்தது. ஆனால், இப்போது அதிலிருந்து விலகி மைத்ரி நிறுவனம் தயாரிக்க, கரண் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார். இதனால், பாதிக்கப்பட்ட நீலோத்ரி நிறுவனம் சினிமா சங்கங்களில் புகார் செய்தது.

இன்னமும் தீர்வு காணப்படாத நிலையில், சென்னையில் நாளை மதியம் தங்கள் தரப்பு நியாயம், துருவ் விக்ரம் மீது குற்றச்சாட்டுகளை வைக்க உள்ளதாக அந்த தரப்பு தெரிவித்துள்ளது. நீலாத்ரி நிறுவனம் சார்பில் அல்லது அந்த பட இயக்குனர் ரமேஷ்வர்மா மீடியாவை சந்தித்து அந்த பட பிரச்னைகள் குறித்து பேச உள்ளார். அனுபமா பரமேஸ்வரன் விவகாரத்தை தொடர்ந்து, இந்த பிரச்னையும் துருவ் விக்ரமுக்கு தலைவலியாக மாறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !