உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பழம்பெரும் நடிகர் ஆனந்தனின் மகன் காலமானார்

பழம்பெரும் நடிகர் ஆனந்தனின் மகன் காலமானார்

பழம்பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகன் அருண்மொழிவர்மான்(52). சில படங்களில் உதவி இயக்குனராகவும், சில படங்களில் நடித்தும் உள்ளார். சில படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார். சென்னை, தி.நகரில் வசித்து வந்த இவர் இன்று(மே 9) காலை காலமானார். இவருக்கு ஷர்லி என்ற மனைவியும், அப்ரினா, மகாலட்சுமி என்ற மகள்களும் உள்ளனர்.

இவரது சகோதரிகளான லலிதா குமாரி(பிரகாஷ்ராஜின் முதல் மனைவி) மற்றும் டிஸ்கோ சாந்தி இருவரும் சினிமாவில் பிரபலமான நடிகைகளாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அருண்மொழிவர்மனின் உடல் இன்று நண்பகல் 12மணியளவில் மகாபலிபுரம் அருகே அடக்கம் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !