உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயாரிப்பாளர் ஆனார் அபி சரவணன்

தயாரிப்பாளர் ஆனார் அபி சரவணன்

கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்தின் மூலம் அறிமுகமானவர் அபி சரவணன். அதன் பிறகு டூரிங் டாக்கீஸ், பட்டதாரி, மாயநதி படங்களில் நடித்தார். அந்த ஒரு நாள், பிளஸ் ஆர் மைனஸ், நாடகம் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தராதிபன் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கிறார். இதில் அவர் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக பிரியங்கா நடிக்கிறார். சையத் என்ற புதுமுகம் இயக்குகிறார். எஸ்.சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார், எல்.வி.முத்து கணேஷ் இசை அமைக்கிறார். இது டில்லியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாராகி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !