மிஷ்கினை பெருமிதப்படுத்திய பெண் காவலர்
ADDED : 1653 days ago
இயக்குனர் மிஷ்கின் தற்போது பிசாசு-2 படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நாடெங்கும் நேற்று நமது நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிய நிலையில் பெண் காவலர் ஒருவர் மிஷ்கினின் சட்டையில் தேசியக் கொடியை அணிவித்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. இந்த புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் மிஷ்கின், சுதந்திர தினத்தன்று பெண் காவலர் ஒருவர் தனக்கு தேசியக் கொடி அணிவித்து பெருமிதப்பட வைத்துவிட்டார் என கூறியுள்ளார்.