உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரம் அருகே ஊஞ்சல் உற்சவம்

கண்டாச்சிபுரம் அருகே ஊஞ்சல் உற்சவம்

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்தூர் அங்காள பரமேஸ்வரி  அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி ஊஞ்சல் ஊற்சவம்  நடந்தது.

உற்சவத்தையொட்டி, முன்னதாக மாலை 7:00 மணி முதல் அங்காள  பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.  தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நிகழ்ச்சியில், ஒதியத்தூர்,  திருமால்ராயபுரம் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !